இளைஞன் ஏகலைவன்






வலிய தோள், சடாமுடி, புழுதி தழுவிய உடல் கொண்ட அந்த இளைஞன் நாயைப் பார்க்கவில்லை. ஓசை வந்த திசையை மட்டுமே நோக்கி அம்புகள் எய்தான். எய்த ஏழு அம்புகளும் அந்த நாயின் வாயைத் தைத்திருந்தன. மிக நுணுக்கமான “சப்தபேதம்” என்கிற கலையை அவன் கற்றுத்தேர்ந்திருந்தான்.

வாயில் அம்புகளுடன் ஓடிய நாயைப் பார்த்த அந்த அரச குமாரர்களுக்கு வியப்பு. அத்துடன் அவர்கள் மனதில் சிறிது பொறாமையும் தலை தூக்கியிருந்தது.

சிறிது நேரத்தில் அவர்கள் தேடிய இளைஞனை சந்திக்க நேர்ந்தது. அந்த இளைஞன் ஏகலைவன் – வேடுவ இளவரசன், ஹிரண்யவிந்துவின் மகன். அந்த அரச குமாரர்கள் – பாண்டவர்கள்.

குரு துரோணருக்கு விவரம் தெரிவிக்கப் பட்டது. அர்ச்சுனன் சோர்வுற்று இருந்ததை கவனித்தார். காரணம், ஏகலைவன் துரோணரே தனக்கும் குரு என்று குறிப்பிட்டு இருந்தான்.

“உங்கள் சீடர்களில் எனக்கு நிகர் யாருமில்லை என்று உறுதி கூறினீர்களே, பின் எப்படி?” அர்ச்சுனனின் கேள்வி துரோணரை சற்று சிந்திக்க வைத்தது. ஏகலைவன் தன்னிடம் வில் வித்தை பயில வந்ததையும் தான் நிராகரித்ததையும் அவர் நினைவில் கொண்டிருந்தார். அர்ச்சுனனை கூட்டிக்கொண்டு ஏகலைவனை சந்திக்கப் புறப்பட்டார்.

ஏகலைவனை நெருங்க அவன் துரோணரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக  விழுந்து வணங்கினான். அருகில் ஒரு பொம்மை, அச்சு அசலாக அவரைப் போலவே. அவருக்கு உடனே அனைத்தும் விளங்கியது.

ஒரு முடிவுக்கு வந்தவராய் அந்த குரு தக்ஷிணையை கேட்டார். சிறிதும் சலனமில்லாமல் ஏகலைவன் அக்கணமே தன் குருவாளால் தன் வலது கை  கட்டை விரலை அறுத்து குருவிடம் சமர்ப்பித்தான். சீடனின் செயலால் பெருமிதம் அடைந்த துரோணர் ஏகலைவனை ஆசீர்வதித்தார்.

துரோணரின் செயல் சரியா, தவறா என்ற வாதம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்கு அப்பால் சென்றால் ஏகலைவனின் தாகம் மற்றும் விடாமுயற்சியே அவன் வில்வித்தையின் நுணுக்கங்களை அறியக்காரணம் .

அவனுடைய பெற்றோர் பற்றி குறிப்புகள் இல்லை எனிலும் அவனுடைய செயல்களின் மூலம் அவர்களுடைய பங்கு தெளிவாகவே விளங்குகிறது.

கற்கத்தயாராக இருந்ததால் சிலையே அவனுக்கு குருவானது. நாம் நம் குழந்தைகளை ஏகலைவர்களாக உருவாக்கத் தயாரா?

அவர்கள் பள்ளியில் பயிலும் பாடங்களை விட நாம் வீட்டில் போதிக்கும் நல்ல குணங்கள், அவர்களுக்கு நாம் அளிக்கும் உற்சாகம், அவர்களின் கவனிக்கும் தன்மை மற்றும் அவர்களின் விடாமுயற்சியே வெற்றியைத் தீர்மானிக்கிறது.






Author Details

Natarajan Sir, our English teacher in Class 11 asked us “we call ourselves more civilised does it mean Rama and Sita are less civilised?” The profound question stuck with me.  When I look back, it was one of the driving forces to go in search of our roots. We all love stories.  Through this platform I would like to share my perspective to the world. As Thiruvalluvar says don’t believe just because somebody says so, but corroborate.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

2 thoughts on “இளைஞன் ஏகலைவன்”

  1. People have to look beyond pandavas, krishna in mahabaratha. Ekalaivan is a beautiful character and his story has profound meaning. happy to see an article about him

    1. Mahabaratha has a number of fascinating characters. Ekalaiva is one such, unfortunately over the years we have been tuned to see the story through the prism of kula (caste). The idea here is to see beyond and there lies something for all of us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *