ப்லவ என்றால் என்ன?

இன்று ப்லவ வருடம் பிறந்துள்ளளது. சார்வரி வருடம் முடிந்து சூரிய பகவான் பங்குனியில் மீன ராசியிலிருந்து வெளியேறி மறுபடியும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இதே நாள் இந்தியாவின் பல பகுதிகளிலும் (இதர சில அண்டை நாடுகளிலும் கூட) விஷு, பைசாகி, உகாதி என்று பல பெயர்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நம் புராதன நூல்களில் குறிப்பிடப்பட்டபடி மொத்தம் அறுபது வருடங்கள் உள்ளன. அறுபது வருட சுழற்சிக்குப் பிறகு மறுபடியும் வருடங்கள் தொடங்குகின்றன. அறுபது வருடங்கள் எதனால் என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள நவகிரகங்களே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்று நாம் நம்புகிறோம். அவ்வாறுள்ள நவகிரஹங்களில் குருவும் (பிரஹஸ்பதி) சனியும் பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ளன. குரு கிரகம் சூரியனைச் சுற்ற 12 பூமி வருடங்களையும் சனி கிரகம் 30 வருடங்களையும் எடுத்துக்கொள்கின்றன. இரண்டு கிரகங்களும் மறுமுறை சந்திக்க 12 மற்றும் 30 ஆகியவற்றின் குறைந்த பட்ச பெருக்கல் மதிப்பான (LCM) 60 வருடங்கள் ஆகின்றன. 60 வருடங்களுக்கு ஒருமுறை அனைத்து கிரகங்களும் தங்கள் நிலைகளில் இருக்கும். இதுவே அறுபது வருடங்கள் ஏற்படக் காரணம். நம் முன்னோர்களின் வான சாஸ்திர அறிவும் கணித அறிவும் வியப்பை அளிக்கின்றன அல்லவா!

வராஹமிஹிரர் (பொ. யு. ஆறாம் நூற்றாண்டு) வானசாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் மிகப்பெரும் நிபுணராக இருந்தார். அவரின் ப்ரிஹத்சம்ஹிதை என்னும் நூலில் அறுபது வருடங்களின் சிறப்பும் கூறப்பட்டிருக்கிறது. அந்த நூலின் எட்டாம் அத்யாயமான பிரஹஸ்பதி சாரத்தில் (கவனிக்க: அவரின் கணிப்பும் குரு கோளின் சுழற்சியை ஒட்டியே உள்ளது) கீழ்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது:

8ம் அத்யாயம், 39-40ம் ஸ்லோகங்கள்: ” ஏழாம் யுகத்தில் உள்ள வருடங்கள் ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி மட்டும் ப்லவ. இவற்றில் முதல் நான்கு வருடங்களில் அதிக மழையால் பயிர் நாசம் மற்றும் பஞ்சத்தால் வறட்சி முதலிய துன்பங்கள் மாறி மாறி ஏற்படும். கடைசி வருடமாக ப்லவ வருடத்தில் அனைத்து துன்பங்கள் நீங்கி தேவையான மழை பெய்து நாட்டில் சுபிட்சம் பெருகும். “

“துர்பிக்ஷாய ப்லவ இதி தத் சோபனே பூரி தோயம் “ – ப்லவ என்னும் வருடத்தில் பஞ்சம் நீங்கி திருப்திகரமான அளவிற்கு நீர் கிடைத்து செழிப்பு மிகும்

இங்கு புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், ஜோதிட பலன்கள் ஓரளவுக்கே நமக்குப் பயன் தரும். நம்பிக்கையோடு இறைவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து வருடங்களுமே நல்ல வருடங்களாகும்.

ப்லவ என்றால் என்ன? ப்லவ என்னும் சொல்லிற்கு தாண்டுதல் (ப்லவங்கம என்பதற்கு குரங்கு என்று பொருள் – அது தாண்டி தாண்டி செல்வதால்), தாண்ட உதவும் பொருள் (படகு, ஓடம் முதலியன) ஆகிய அர்த்தங்கள் உள்ளன.

ஆகவே இந்த ப்லவ வருடத்தில் நாம் நம் துன்பங்கள் அனைத்தையும் எளிதில் தாண்ட இறைவனை வேண்டுவோமாக.

புது வருடத்தை வரவேற்க ஒரு அருமையான பாடல் கீழே. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடலாக இது இருக்கும் என நம்புகிறோம்.

உங்களின் பிறந்த தமிழ் வருடத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள பெட்டியைக் காணவும்.

Find your Tamil year of birth

Author Details

Rangarajan has been blogging for over 12 years now on various topics. With Thedal, he becomes one with the universe and he is hoping that his search will help him discover the eternal truth.  Please join him as he traverses through the universe across temples, philosophies and science!

8 thoughts on “ப்லவ என்றால் என்ன?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *