சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கடவுள் பக்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பழைய தமிழ் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகித்தது.  குறிப்பாக கண்ணதாசன் வரிகளில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த பல பக்தி பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடம் ஆன்மீக சிந்தனையை வளர்க்க உதவியது.

இவர்கள் கூட்டணியில் வந்த  “சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது…” பாடல் மிக பிரபலம்.  இந்த பாடலை பாடியவர்கள் T.M. சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன். திரைப்படத்தில் இந்த பாடலுக்கு பிரபல நகைச்சுவை நடிகர்கள் வி.கே.ராமசாமி மற்றும் தங்கவேலு நடித்திருப்பது பட்டித்தொட்டியெல்லாம் இந்த பாடல் பிரபலம் அடைய ஒரு முக்கிய காரணம்.

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
Thedal.info

முருகப்பெருமானின் அலங்கார வர்ணனையை தனக்கே உரிய பாணியில் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார்.

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்

பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!

திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்

திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். காணொளியையும் இணைத்துள்ளோம். படியுங்கள், கேளுங்கள், பக்தியில் முழுகுங்கள்

முருகனுக்கு அரோஹரா!

 

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது பாடலின் வரிகள்

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!

முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

மயில் மீது மன்னனை இருக்க வைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!

மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்

குருவாயூருக்கு வாருங்கள்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

ஆயர்பாடி மாளிகையில்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

ஓம் நமோ நாராயணாய

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே 

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

பொய்யின்றி மெய்யோடு

கோதையின் திருப்பாவை

கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…

சின்னஞ்சிறு பெண் போலே

விநாயகனே வினை தீர்ப்பவனே..

நீயல்லால் தெய்வமில்லை

Author Details

My  quest to learn more about our culture and history is never-ending. Being  a student of  Sri Ramakrishna mission, Sri Ahobila Math school and Vivekananda College, what else can you expect other than the influence of our rich Indian culture and tradition? Through this website my humble attempt is to inculcate the highest knowledge of our culture to young minds in simple words.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *